Disqus Shortname

உத்திரமேரூரில் மொழிபபோர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக் கூட்டம்

உத்திரமேரூர் ஜன, 26
உத்திரமேரூர் பஸ் நிலையம் அருகே மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். காஞ்சிமாவட்டச் செயலாளர்கள் வளையாபதி, பார்த்திபன், மகேந்திரன் மாவட்டவழக்கறிஞரணி பொருளாளர் சங்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அவைத்தலைவர்கள் கருணாகரன், மாவட்ட மாணவரணி நிர்வாகிகள் சுரேஷ் அனைவரையும்வரவேற்றார். நிகழ்ச்சியில் தலைமை கழக அமைப்பு செயலாளர் வந்தியதேவன்,கொள்கை பரப்பு துணை செயலாளர் ராஜாதிருநாவுக்கரசு, மாநில மகளிரணி துணைஅமைப்பாளர் மல்லிகாதயாளன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்
முன்னதாக இந்தி திணிப்பு போராட்டத்தின் போது உயிர்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலிசெலுத்தப்பட்டுவீரவணக்கம்செல்லுத்தப்பட்டது. பின்னர் பேசியதாவது தமிழகத்தில்பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வு, பஸ் கட்டணம், பால் கட்டணம் என பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகள் உயர்த்தியும் உள்ளிட்ட பல்வேறு வகைகளில்மத்திய, மாநில அரசுகள் பொது மக்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. எனவேவரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மற்றும் அதிமுக ஆட்சியினைவிரட்டியடிக்க திமுகவுடனான கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யவேண்டும் என்றனர். நிகழ்ச்சிகளில் மதிமுக மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைநிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

No comments