Disqus Shortname

உத்திரமேரூர் அருகே வாட்டர் வாஷ் செய்யும் போது மின்சாரம் பாய்ந்து லாரி டிரைவர் பலி

உத்திரமேரூர்
உத்திரமேரூர் அடுத்த எஸ்.மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அஜீஸ் 31
லாரி டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். நேற்று பணி முடிந்த பின்
லாரியினை வாட்டர் வாஷ் செய்வதற்க்காக லாரியின் மீது இருப்பு பைப்
கொண்ட பைப் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அருகில் இருந்த மின்கம்பியின் மீது இரும்பு பைப் பட்டதில் அஜீஸ்
மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்த
சாலவாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அஜீஸ் உடலை
கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக
வைத்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments