Disqus Shortname

உத்திரமேரூர் ஒன்றியத்தில் திமுக ஊராட்சி சபைக் கூட்டம் துவங்கியது

உத்திரமேரூர் 26 JAN 2019
உத்திரமேரூர் ஒன்றிய திமுக சார்பில் அம்மையப்பநல்லூர், காரணை,
இராவத்தநல்லூர் தண்டரை, மானாம்பதி கண்டிகை, மானாம்பதி, விசூர்
மற்றும் பெருநகர் உள்ளிட்ட கிராமங்களில் திமுக சார்பில் ஊராட்சி சபைக்
கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட
செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள்
ஞானசேகரன், குமார், பாரிவள்ளல், தலைமை செயற்குழு உறுப்பினர் நாகன்,
விவசாய அணி அமைப்பாளர் ஏழுமலை, சுப்பையா, பொறியாளர் அணி
சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதி கோவிந்தராஜ்
அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் நாடாளுமன்ற தேர்தல்
பணிக்குழுப் பொருப்பாளர் வைத்திலிங்கம் கலந்து கொண்டு
சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் கிராமத்தில் நிகழும் குடிநீர், சாலை,
மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகள் குறித்து கிராம மக்களின்
கோரிக்கைகள் கேட்டறியப்பட்டு அவர்களிடம் பிரச்சனை சம்மந்தமாக
மனுக்கள் பெறப்பட்டன. மேலும் கிராமங்களில் நிறைவேற்றப்படாத
பிரச்சனைகள் கிராம மக்களின் அடிப்படை தேவைகள் குறித்து கிராம
மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோதப்
போக்கினை கிராம மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பெருநகர்
வடிவேலு, ருத்ரகோடி, முனிரத்தினம், மானாம்பதி சுந்தராஜன் உட்பட
நிர்வாகிகள் உட்பட பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments