Disqus Shortname

உத்திரமேரூரில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி

உத்திரமேரூர் ஜன 25
உத்திரமேரூரில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி வாக்காளர் தின
விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல்
அலுவலர் கமலநாதன் தலைமை தாங்கி பேரணியை கொடியசைத்து துவக்கி
வைத்தார். வட்டாட்சியர் அகிலாதேவி, உத்திரமேரூர் சட்ட மன்ற தேர்தல்
நடத்தும் அலுவலர் அண்ணாமலை, துணை வட்டாட்சியர் பாலாஜி ஆகியோர்
முன்னிலை வகித்தனர். தேர்தல் உதவியாளர் வெங்கடேசன் அனைவரையும்
வரவேற்றார் பேரணியானது வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் துவங்கி,
சன்னதி தெரு, பஜார் வீதி, பெரிய நாராசம்பேட்டை தெரு உள்ளிட்ட முக்கிய
வீதிகள் வழியாக பேரணியாக சென்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு
ஏற்படுத்தப்பட்டது. இதில் வாக்களிப்பதின் அவசியம், பணத்திற்காக நமது
ஓட்டுகளை விற்க கூடாது வாக்குரிமை நமது நாட்டு உரிமை உள்ளிட்ட
விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியும், துண்டுபிரசுரங்கள்
வழங்கியும், கோஷங்கள் எழுப்பியும் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினர்
நிகழ்ச்சியில் தனியார் கல்லூரி மாணவர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள்
கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

No comments