Disqus Shortname

உத்திரமேரூரில் தேமுதிக சார்பில் சமத்துவ பொங்கல் விழா

உத்திரமேரூர்
காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் உத்திரமேரூர் பேரூர் தேமுதிக சார்பில்சமத்துவ பொங்கல் வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சியில் பேரூர் கழக செயலாளர் வீரமணி தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி
செயலாளர் அருண்குமார், ஒன்றிய செயலாளர்கள் அழிசூர் கன்னியப்பன்,
கார்த்திக், மாவட்ட தொழிற்சங்க துணை செயலர் வெங்கடேசன் ஆகியோர்
முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர்
ராஜேந்திரன் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் பஜார் வீதி வழியாக
ஊர்வலமாக சென்று பெருமாள் கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த
திடலில் புதுபானையில் பொங்கலிட்டு பொங்கலோ பொங்கல் என்று கோஷம்
எழுப்பி சமத்துவ பொங்கல் பட்டிகையினை சிறப்பாக கொண்டாடினர்.
அதனைத் தொடர்ந்து ஏழை எளியோருக்கு அரிசி, பருப்பு, கரும்பு, மஞ்சள்
உள்ளிட்டவைகள் அடங்கிய பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில்
அவைத் தலைவர் ஆறுமுகம், பொருளாளர் வேலன், ஐய்யப்பன்,
இளைஞரணி துணைச் செயலாளர் ஜீவானந்தம் உட்பட பலர் கலந்து
கொண்டனர்.

No comments