Disqus Shortname

உத்திரமேரூர் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை (45 கிலோ ஹான்ஸ்) பாக்கெட்கள் பறிமுதல்

உத்திரமேரூர்
உத்திரமேரூர் அடுத்த கருவேப்பம்பூண்டி பகுதியில் நேற்று மாலைஉத்திரமேரூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.அப்போது
காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேரூர் நோக்கி வந்துகொண்டிருந்த லோடு
ஆட்டோவை சோதனை செய்த போது அதில் தடை செய்யப்பட்ட 45 கிலோ
மதிப்பிலான புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது
தெரியவந்தது. இதையடுத்து லோடு ஆட்டோவில் வந்த மருத்துவான்பாடி
கிராமத்தை சேர்ந்த சாம்ராஜ், மணிகண்டன் மற்றும் மதூர் கிராமத்தை சேர்ந்த
சத்தியா ஆகியோர் கைது செய்யப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்த
புகையிலை பொருட்கள் அதற்கு பயன்படுத்தப்பட்ட லோடு ஆட்டோவையும்
பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments