Disqus Shortname

உத்திரமேரூர் அருகே ரூ.10 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழா

உத்திரமேரூர் 27-01-2019
உத்திரமேரூர் அடுத்த மருத்துவான்பாடி கிராமத்தில் சுமார் 800க்கும் மேற்பட்ட
குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கோடைகாலங்களில்
குடிநீர் தட்டுப்பாடு தொடர்ந்து நிலவி வந்தது. மேலும் மற்ற நாட்களில்
சுத்தமான குடிநீர் கிடைக்காமல் சிரமத்திற்குள்ளாகினர். எனவே குடிநீர்
சுத்திகரிப்பு நிலையம் அமைத்துத் தர வேண்டும் என கிராம மக்கள் க.சுந்தர்
எம்.எல்.ஏ விடம் கோரிக்கைவிடுத்தனர். கோரிக்கையின் பேரில் சட்டமன்ற
உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு
செய்து சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உத்தரவிட்டார். அதனடிப்படையில்
சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா (27-01-2019)நடந்தது.
விழாவில் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். ஊராட்சி
செயலர் வெங்கடேசன், ஊராட்சி நிர்வாகிகள் சந்திரன், ரஜினி, நந்தகுமார்,
தேவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் காஞ்சி திமுக
தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ கலந்து கொண்டு கிராம
மக்களின் பயன்பாட்டிற்கு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை திறந்து
வைத்தார். நிகழ்வின் போது சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் குமார்,
விவசாய அணி அமைப்பாளர்கள் ஏழுமலை, சுப்பையா, இலக்கிய அணி
துணை அமைப்பாளர் காளிதாஸ், பொறியாளர் அணி சசிகுமார் உட்படநிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments