Disqus Shortname

உத்திரமேரூர் அருகே சாலை விபத்து ஒருவர் பலி இருவர் காயம்

உத்திரமேரூர்:29-12-2018
உத்திரமேரூரில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி
வருபவர் உக்கல் கிராமத்தை சேர்ந்த ஜானகிராமன் 37 இவருக்கு
திருமணமாகி ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர். நேற்று மாலை
உத்திரமேரூரிலிருந்து எண்டத்தூர் கிராமத்திற்கு தனது இருசக்கர
வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது கம்மாளம்பூண்டி கிராமம்
அருகே வந்த போது எதிரில் மேல்மருவத்தூர் கோவிலிலிருந்து பக்தர்கள்
வந்து கொண்டிருந்த ஆம்னிவேன் நிலை தடுமாறி எதிர்பாராதவிதமாக எதிரே
வந்த ஜானகிராமனின் இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியது
இதில் ஜானகிராமன் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்தார்.
ஆம்னி வேனில் வந்த பெங்களுரை சேர்ந்த கிரண் 24 மற்றும்
சத்தியநாராயணன் 48 ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதை கண்ட
அக்கப்பக்கத்தினர் 108 வாகனம் மூலம் உத்திரமேரூர் அரசு
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனை கொண்டு செல்லும்
வழியில் ஜானகிராமன் உயிரிழந்தார். காயமடைந்த இருவருக்கும் சிகிச்சை
அளிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து உத்திரமேரூர் போலீசார் வழக்குப்பதிவு
செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments