உத்திரமேரூர் அருகே ஹாலோ பிளாக் கம்பெனியில் டையிங் மிஷினில் சிக்கி ஊழியர் பலி
உத்திரமேரூர்:28-12-2018
உத்திரமேரூர் அடுத்த சிறுமயிலூர் கிராமத்தில் ஹாலோ பிளாக் தயாரிக்கும்
தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில்
சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 50திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி
வருகின்றனர். இங்கு டையிங் மிஷின் ஹெல்பராக நீர்குன்றம் கிராமத்தை
சேர்ந்த ரஜினி (எ) ஏகாம்பரம் 34 என்பவர் பணியாற்றி வருகிறார். இன்று
மாலை பணிகள் முடிந்தபின் டையிங்மிஷினை துடைக்க முற்பட்ட போது
எதிர்பாராதவிதமாக கை சுவிட்ச் மீதுபட்டு மிஷின் இயங்கத்துவங்கியது
இதனால் பெல்டில் ரஜினியின் தலைமாட்டியது பயந்து போன ரஜினி
கூச்சலிட்டார். இவரின் அலறல் சத்தம் கேட்ட சக ஊழியர்கள் அவரை
காப்பாற்ற மிஷினை ஆப்செய்து விட்டு பார்த்த போது இரத்த வெள்ளத்தில்
சம்பவ இடத்திலேயே ரஜினி உயிரிழந்தார். இதையடுத்து உத்திரமேரூர்
போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் உத்திரமேரூர்
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ரஜினியின் உடலை மீட்டு
செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு
அனுப்பிவைத்து இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்திரமேரூர் அடுத்த சிறுமயிலூர் கிராமத்தில் ஹாலோ பிளாக் தயாரிக்கும்
தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில்
சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 50திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி
வருகின்றனர். இங்கு டையிங் மிஷின் ஹெல்பராக நீர்குன்றம் கிராமத்தை
சேர்ந்த ரஜினி (எ) ஏகாம்பரம் 34 என்பவர் பணியாற்றி வருகிறார். இன்று
மாலை பணிகள் முடிந்தபின் டையிங்மிஷினை துடைக்க முற்பட்ட போது
எதிர்பாராதவிதமாக கை சுவிட்ச் மீதுபட்டு மிஷின் இயங்கத்துவங்கியது
இதனால் பெல்டில் ரஜினியின் தலைமாட்டியது பயந்து போன ரஜினி
கூச்சலிட்டார். இவரின் அலறல் சத்தம் கேட்ட சக ஊழியர்கள் அவரை
காப்பாற்ற மிஷினை ஆப்செய்து விட்டு பார்த்த போது இரத்த வெள்ளத்தில்
சம்பவ இடத்திலேயே ரஜினி உயிரிழந்தார். இதையடுத்து உத்திரமேரூர்
போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் உத்திரமேரூர்
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ரஜினியின் உடலை மீட்டு
செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு
அனுப்பிவைத்து இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments