Disqus Shortname

உத்திரமேரூரில் சமுதாய வளைகாப்பு விழா க.சுந்தர் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்.

உத்திரமேரூர் செப் 14
உத்திரமேரூரில் ஒருங்கிணைந்த குழந்தைகளின் வளர்ச்சி திட்டத்தின்
சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திலகவதி தலைமை
தாங்கினார். உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், நகர
பாரிவள்ளல் முன்னிலை வகித்தனர் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி
திட்ட மேற்பார்வையாளர் காயத்திரி அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ
கலந்து கொண்டு விழாவினை குத்துவிளக்கேற்று துவக்கி வைத்தார்.
50த்திற்கு மேற்பட்ட கர்ப்பணி தாய்மார்களுக்கு வளைகாப்பு விழா நடந்தது
இவ்விழாவில் 7 வகையான கலவை உணவுகள் கர்பிணித் தாய்மார்களுக்கு
வழங்கப்பட்டது. மேலும் கர்பிணி தாய்மார்கள் கர்பகாலங்களில் உட்கொள்ள
வேண்டிய ஊட்டச்சத்து உணவுகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கற்பிணித் தாய்மார்களுக்கு சேலை, வலையல்
மஞ்சள், குங்குமம் அடங்கிய நினைவு பரிசினை க.சுந்தர் எம்.எல்.ஏ வழங்கி
வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் அங்கன்வாடி பணியாளர்கள் பொது மக்கள் உட்பட பலர் பங்கேற்றனர். 

No comments