Disqus Shortname

உத்திரமேரூர் அடுத்த திருமுக்கூடல் கிராமத்தில் தாய்ப்பால் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி


உத்திரமேரூர் 2018 ஆக, 27
உத்திரமேரூர் அடுத்த திருமுக்கூடல் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் சுகாதாரத்துறை சார்பில்  தாய்ப்பால் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் அங்கன்வாடி ஆசிரியை சரசு கலந்து கொண்டு தாய்ப்பால் குழந்தைகளுக்கான முக்கியத்தும் குறித்தும், தாய், சேய் நலன் குறித்தும், குழந்தை பிறந்தபின் உட்கொள்ள வேண்டிய இயற்க்கை உணவுகள் மற்றும் குழந்தைக்கு பால் கொடுக்கும் முறைகள் குறித்தும் விளக்கி கூறினார். மேலும் அங்கன்வாடி மையத்தில் வழங்கப்படும் இணை உணவின் அவசியம் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. நிகழ்ச்சியின் போது தாய்மார்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு வகை கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் பாலுட்டும் தாய் மார்கள், கர்ப்பிணிகள் மற்றும் வளர் இளம் பெண்கள் உட்பட அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதாரப்பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments