உத்திரமேரூரில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி
உத்திரமேரூா்
ஆக, 26
உத்திரமேரூர்
காவல் நிலையம் சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நேற்று உத்திரமேரூரில் நடந்தது. பேரணியினை உத்திரமேரூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அமுல்ராஜ் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். பேரணியானது பஸ் நிலையத்தில் துவங்கி பஜார் வீதி, கைலாசநாதர்
கோவில் தெரு, பெரிய நாராசம் பேட்டை தெரு, சன்னதி தெரு, பாலசுப்பரமைணியர் கோவில் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக
ஹெல்மெட் அணிந்தவாறு இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பேரணியில் உத்திரமேரூர் காவல் நிலைய காவலர்கள் உட்பட தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டு ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுவதன் அவசியம் குறித்த துண்டுபிரசுரங்கள் வழஙகி விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினர். நிகழ்ச்சியில் போலீசார் தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments