Disqus Shortname

உத்திரமேரூரில் பா.ஜ.கட்சியின் சார்பில் வாஜ்பாய் மறைவுக்கு அஞ்சலி


உத்திரமேரூர் ஆக, 17

உத்திரமேரூரில் பா.. வின் சார்பில் முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாயின் மறைவுக்கு மௌன ஊர்வலமாகச் சென்று வாஜ்பாய் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். முன்னதாக அம்பேத்கர் சிலை அருகே இருந்து புறப்பட்ட மௌன ஊர்வலமானது பஜார் வீதி சன்னதித் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று பஸ் நிலையம் அருகே முடிவடைந்தது. பின்னர் பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த வாஜ்பாய் உருவப்படத்திற்கு பா..கவினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் மாநில குழு உறுப்பினர் ராஜவேலு தலைமை தாங்கினார். ஒன்றிய துணைத் தலைவர் முரளி, பாபு, ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மல்லியங்கரணை ராமகிருஷ்ணா மடத்தின் நிர்வாகிகள் சுவாமி ஆத்மாநந்தாஜீ கலந்து கொண்டு வாஜ்பாய் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் பா..கவினர் பலர் கலந்து கொண்டனர்.

No comments