உத்திரமேரூரில் ஸ்ரீ.நுக்கலம்மன் ஆலய 31 ம் ஆண்டு தீமிதி திருவிழா
உத்திரமேரூர்
- எண்டத்தூர் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ.நுக்கலம்மன் ஆலயத்தில் 31 ம் ஆண்டு தீமிதி திருவிழா நேற்று(17-08-2018) வெகு விமரிசையாக நடைப்பெற்றது. முன்னதாக நேற்று காலை நங்கையர்குளத்திலிருந்து புனித நீர் திரட்டி வரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைப்பெற்றது. அதன்பின் அம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். மதியம் கோவில் வளாகத்தில் பக்தர்கள் ஊரணிப் பொங்கலிட்டும், வேப்பிளையாடை அணிந்து கோவிலை வளம்வந்தும் அம்மனை வழிப்பட்டனர். மாலை விரதமிருந்து காப்புகட்டிய பக்தர்கள் அம்மனை சுமந்தபடி வரசித்தி வினாயகர் கோவிலிலிருந்து மேளதாடங்கள் தாரதப்படைகள் முழங்க வானவேடிக்கைகளுடன் புறப்பட்டு முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வந்து கோவிலருகே அமைக்கபட்டிருந்த தீ குண்டத்தில் இறங்கி தீமிதித்தனர்.
இரவு பூங்கரகம், சிலம்பாட்டம், பொய்கால்குதிரை, கரக்காட்டத்துடன் ஸ்ரீ. நூக்கலம்மன் புஷ்ப விமான பல்லக்கில் சிறப்பு அலங்காரத்துடன் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார் விழாவில் ஆயிரக்கனக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரித்தனர். விழாவிற்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி டி.ரமேஷ் தலைமையிலான விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
No comments