Disqus Shortname

உத்திரமேரூர் ஒன்றிய, நகர திமுக சார்பில் 2000 எழை, எளியோருக்கு சமபந்தி விருந்து க.சுந்தர் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்.


உத்திரமேரூர் 2018 ஆக, 26
உத்திரமேரூர் ஒன்றிய மற்றும் நகர திமுக நிர்வாகிகளுக்கான செயற்குழுக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் நாகன், விவசாய அணி அமைப்பாளர்கள் சோழனூர் மா.ஏழுமலை, காவனூர்புதுச்சேரி சுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் உத்திரமேரூர் ஒன்றிய அவைத் தலைவர் மனோகரன் நகர செயலாளர் பாரிவள்ளல் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். நிகழ்ச்சியில் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் .சுந்தர் எம்.எல். கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். திமுக தலைவர் டாக்டர் கலைஞர், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் கேரள வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து திமுக செயல் தலைவர் மு..ஸ்டாலின் அவர்களை திமுக தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வரும் 30 ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கும் கூட்டத்திற்கு உத்திரமேரூர் ஒன்றியத்திலிருந்து 30திற்கும் மேற்பட்ட வாகனத்தில் செல்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து பஸ் நிலையத்தில் 2000 எழை, எளியோருக்கு சமபந்தி விருந்து வழங்கப்பட்டது. நிகழ்ச்சியினை காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் .சுந்தர் எம்.எல். துவக்கி வைத்தார்.  நிகழ்ச்சியில் எம்.எல்.ஏக்கள் எழிலரசு, புகழேந்தி, ஆர்.டி.அரசு, சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் குமார், மாவட்ட பிரதிநிதி கோவிந்தராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments